அந்த இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார்.. மானத்தை வாங்கிய நடிகை கஸ்தூரி!!

37

கஸ்தூரி..

90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு 63 நாட்களுக்கு பின் வெளியேற்றப்பட்டார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த கஸ்தூரி சினிமாத்துறையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நான் தமிழில் நடித்த இரண்டாவது படத்தின் இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைக்க முயன்றார். அது எனக்கு வருத்தத்தை கொடுத்ததாகவும் அவர் அப்படி பேச ஆரம்பிக்கும்போது என்னிடம் அந்த இயக்குநர் என்ன எதிர்ப்பார்க்கிறார் என்று எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது.

நான் எதையும் யோசிக்காமல் அந்த இடத்திலேயே அவரை அசிங்கமாக திட்டி மானத்தை வாங்கிவிட்டதாகவும் நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார். நான் அப்படி பேசியதை அடுத்து என்னை அந்தப்படத்தில் இருந்து தூக்குவதற்கான காரத்தை தேடிக்கொண்டிருந்தார். கடைசியாக நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று கூறி படத்தில் இருந்து தூக்கிவிட்டார்.

இந்த காரணத்தை என்னிடம் சொன்னவுடன் நானும் என்னுடன் இருந்தவர்களும் பலமாக சிரித்துவிட்டோம். ஆடிஷன் போது நான் என்ன மாதிரியான தோற்றத்தில் இருக்கிறோம் என்பதை பார்த்துதான் கமிட் செய்வார்கள். அப்படி இருக்கும் போது அவர் என்னை வேண்டுமென்றே படத்தில் இருந்து தூக்கினார்.