அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள்!

550

சமகாலத்தில் தமிழர்கள் மேற்குலக வாழ்வியலை பின்பற்ற ஆசை கொண்டு, நவ நாகரீகத்தின் பின்னால் செல்கின்றனர்.

தமது கலாச்சாரங்களை மறந்து வெளிநாட்டு வாழ்க்கை வாழவே பெரும்பாலான தமிழர்கள் விரும்புகின்றனர்.

ஒரு சிலர் தமிழில் பேசுவதை வெட்கம் என நினைத்து, தம் தாய்மொழியை மறந்து அந்நிய மொழியான ஆங்கிலத்தை பேசிக் கொள்கின்றனர்.

தமிழர்கள் மேற்குலகின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டவர்கள் தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக அதனை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணியும் மேற்குலக நாட்டவர்கள், தமிழில் பேசுவதையும் எமது கலாச்சார அடையாளங்களை பேணவும் அவர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்று மேற்குல நாகரீகத்தை விரும்பும் தமிழர்களுக்கு செருப்படி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் நடந்த நிகழ்வில் தமிழர்களின் கலாச்சார நடனமான பரத நாட்டயமும், தேர்த் திருவிழாவும் நடைபெற்றுள்ளது.

இதன்போது தமிழ் மொழியில் அங்குள்ள வெள்ளையின சிறுவர்களுக்கு பஜனையும் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை பெருந்தொகையான வெள்ளையர்கள் பார்வையிட்டனர் என்பது சிறப்பம்சம்