பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற அழகான சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நாயகன்-நாயகியாக நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.
இவர்கள் படப்பிடிப்பில் சேர்ந்து செல்பி எடுக்கும் புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாக காதலிக்கிறார்கள் என்று எல்லாம் கூறப்பட்டது. ஆனால் நிஜத்தில் அவர்கள் நண்பர்களாக தான் பழகுகிறார்கள்.
சமீபத்தில் ராஜா ராணி சீரியலின் உதவி இயக்குனருக்கும் ஆல்யா மானசாவிற்கும் தகராறு ஏற்பட்டு அதை தடுக்க போன சஞ்சீவ் அந்த நபரை தள்ளிவிட்டதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
இதுகுறித்து சஞ்சீவிடம் கேட்டால், இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்று கேள்வி கேட்கிறார்.