இந்தியாவிலேயே முதன்முறையாக காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் சூர்யா (25). நடன கலைஞரான இவர் சினிமாவில் துணை நடிகராகவும் உள்ளார். இவரது தோழி இசான்கேசான் (19).
2013-ம் ஆண்டு சூர்யாவும், இசான்கேசானும் சந்தித்து அவர்களுக்குள் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் காதலாக மாறியது.
இருவரும் 6 மாதம் காதலித்தனர். அப்போது இருவரும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு சூர்யா ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறினார். அவரது காதலி 2015-ம் ஆண்டு ஆபரேசன் மூலம் ஆணாக மாறினார்.
இதையடுத்து தங்கள் திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் கேட்க அவர்களும் சம்மதித்தனர்.
அதன்படி அடுத்த மாதம் கேரள அரசின் திருமண சிறப்பு திருத்த சட்டப்படி காதலர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.