ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்டு கொன்ற இளைஞர்: பகீர் காரணம்!!

1379

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து காதலியை தள்ளிவிட்டு காதலனே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காமில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார் 22 வயதான பூனம் என்ற பூனே நகரத்து இளம்பெண்.

இவர் பெல்காமில் உள்ள சுனில் என்ற மருத்துவரை காதலித்து வந்துள்ளார். சமீப நாட்களாக தம்மை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் சுனிலை நிர்பந்தித்து வந்துள்ளார்.

இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தமது திருமணத்திற்கு சுனில் மறுப்பு தெரிவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து தொல்லை தந்ததால் ஆத்திரமடைந்த சுனில் தமது சகோதரருடன் இணைந்து தனது காதலியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி சுனில் தமது காதலி பூனத்தை அழைத்துக் கொண்டு கோவா சென்றுள்ளார்.

செல்லும் வழியில் சுனில் தமது சகோதரருடன் இணைந்து பூனத்தை நினைவிழக்க செய்துள்ளனர். பின்னர் கானாபூர் அருகே அமைந்துள்ள ஆற்றில் ஓட்டும் ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று கரை ஒதுங்கிய உடலை மீட்ட பொலிசார் விசாரணைக்கு பின்னர் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பூனத்தின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே தற்போது சுனில் மற்றும் அவரது சகோதரரை பொலிசார் கைது செய்துள்ளனர்.