கணவனின் கள்ளக் காதலியுடன் சேர்ந்த மனைவி : கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

410

தேனி….

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பவுன்துரை மகன் இன்பராஜ் (30). இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், இன்பராஜுக்கு அதே தெருவைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது சம்பந்தமான புகார் நிலுவையில் இருந்து வந்த நிலையில்,

நேற்று இரவு தாமரைக் குளம் கண்மாய் கரையில் வைத்து இன்பராஜ் மனைவி முத்து லட்சுமியும் அவருடைய கள்ளக் காதலியான ஆனந்தியும் சேர்ந்து, இன்பராஜின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் காயமைடந்த அவரை சிகிச்சைக்காக கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முத்துலட்சுமியையும், ஆனந்தியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்தவரை அவரது மனைவியும், கள்ளக்காதலியும் சேர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே அதற்கான காரணம் தெரிய வரும்.