கொடிய வி‌ஷம் கொண்ட பாம்புகள்.. ஒன்றுக்குமேல் ஒன்று ஊர்ந்து வெளிவந்த அதிர்ச்சி காட்சி!!

754

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திராநகரை சேர்ந்தவர் ஜானகிராமன் என்ற தொழிலாளி இன்று காலை தனது வீட்டின் பின்புறம் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட கொடிய வி‌ஷம் கொண்ட பாம்பு குட்டிகள் ஒன்றுக்கு மேல் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்ததை அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாம்பு குட்டிகளுக்கு அருகில் 80க்கும் அதிகமான பாம்பு முட்டைகளும் குவிந்து இருந்துள்ளது.

அந்த முட்டைகளில் இருந்து ஒவ்வொரு பாம்பு குட்டிகள் வெளியே வரத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து, அதிர்ந்து போய் கத்தியுள்ளார்.

அக்கம், பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து அதிர்ச்சியுடன் பாம்பு குட்டிகளையும், முட்டைகள் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பாம்பு குட்டிகளை பிடித்த நேரத்திலும் முட்டைகளில் இருந்து பாம்புகள் வெளியே வந்த வண்ணம் இருந்தன. வனத்துறையினர் அந்த பாம்பு குட்டிகளையும் பிடித்தனர். முட்டைகளையும் கைப்பற்றினர்.

பாம்பு முட்டைகள் அனைத்தும், கொத்து கொத்தாக இருந்தன. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு பிசைப்பு தன்மையுடன் வித்தியாசமாக இருந்துள்ளது.

மீட்கப்பட்ட பாம்பு குட்டிகள் எந்தவகை என்பது உடனடியாக தெரியவில்லை. வனக்காப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான வன ஊழியர்கள் பிடிபட்ட பாம்பு குட்டிகள் எந்த வகை என கண்டறிந்து வருகின்றனர்.