கோயிலுக்குள் வைத்து 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: பூசாரிக்கு தர்ம அடி!!

499

சென்னையில் 4 வயது சிறுமியை கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது பூசாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.சூளைமேடு பகுதியில் 4 வயது சிறுமி பள்ளி விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இவர் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கையில், அருகில் உள்ள கோயிலில் பூசாரியாக இருக்கும் உதயக்குமார் என்ற 40 வயது நபர் கோயிலுக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.கோயிலை விட்டு வெளியே வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக உதயக்குமார் மீது பொலிசில் புகார் அளித்துள்ளனர்.பின்னர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து பூசாரியை கோவிலில் இருந்து அடித்து உதைத்து வெளியே இழுத்து வந்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.இதனைத் தொடர்ந்து உதயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.