டுபாயில் உயிரிழந்த கூலி தொழிலாளி : உடலை கொண்டு வர உறவினர்கள் கெஞ்சல்!!

836

தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் துபாயில் உயிரிழந்துவிட்டதால், அவரின் உடலை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் படி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. துபாயில் கூலி வேலை செய்து வந்த இவர், இறந்துவிட்டதாக கூறி, அவர் வேலை பார்க்கும் நிறுவனம் முனியசாமியின் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பியுள்ளது.

இதை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர் எப்போது இறந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்த விபரங்கள் அதில் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் துபாயில் இருக்கும் முனியசாமியின் உடலை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தரும் படி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.