தாயின் தவறான நடத்தையால் கர்ப்பமான சிறுமி!!

683

சென்னையில் 12 வயது பள்ளி மாணவி கர்ப்பமாகியுள்ளதற்கு தனது தாயே காரணமாக அமைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநின்றவூரில் கடை வைத்திருக்கும் ரேணுகா தேவிக்கும், ஆட்டோ ஓட்டுநர் பரமசிவம் என்பவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.இவர்களின் பழக்கத்தின் மூலம் ரேணுகா தேவியின் மகளிடம் பரமசிவம் நெருங்கி பழகியுள்ளார். இதனால் ரேணுகாவின் மகன் கர்ப்பமாகியுள்ளார்.

தனது மகள் கர்ப்பமாகியுள்ளது ரேணுகாவுக்குதெரியவில்லை. இந்நிலையில் பள்ளி சென்ற சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதுதான் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

முதலில் மருத்துவர்களிடம் மகளின் வயது 18 என அவர் கூறி கருவை கலைக்குமாறு கூறியுள்ளார். பின்னர் மருத்துவர்கள் கண்டிப்புடன் கேட்க, பள்ளி மாணவியான தன்னுடைய மகளுக்கு இவ்வாறு நேர்ந்துள்ளது. யாருக்கும் தெரியாமல் கலைக்கவே மருத்துவமனைக்கு வந்ததாக ரேணுகா ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து, ரேணுகாவின் மகளிடம் கர்ப்பத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் விசாரித்துள்ளனர். அப்பொழுது, ஓட்டுநர் பரமசிவத்தின் பெயரை அவள் கூறியுள்ளார்.

இதை அறிந்த மருத்துவர்கள் திருநின்றவூர் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் பரமசிவத்தை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் ஒப்புக் கொள்ள மறுத்த அவர் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டார்.அவர் மீது போஸ்க்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார் புழல் சிறையில் அடைத்தனர்.