திருநங்கைகளிடம் மண்டியிட்ட நடிகை கஸ்தூரி!!

490

திருநங்கைகள் குறித்து டுவிட்டரில் தவறாக கருத்து வெளியிட்ட நடிகை கஸ்தூரி, இதற்காக தற்போது பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கு தொடர்பில் அவர் திருநங்கைகளுடன் ஒப்பிட்டு வெளியிட்டிருந்த கருத்துக்கு, தற்போது எதிர்ப்புக்கள் வலுப்பெற்றுவரும் நிலையிலேயே அவர் மன்னிப் கோரியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக நடிகை கஸ்தூரி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,“நான் மிகவும் நேசிக்கின்ற என்னுடைய நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இதனால் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதனை உணர்ந்தவுடன் குறித்த டுவிட்டை உடனடியாக நீக்கி விட்டேன்.

மேலும் திருநங்கைகளிடம் நேரடியாகவும் சமூக வளைதளங்களின் ஊடாகவும் எனது நிலையை கூறி மன்னிப்பு கேட்டேன். முதலில் என்னை திட்டினார்கள்பின்னர் மன்னித்து விட்டார்கள்.

ஆனால் ஒருசிலர் நான் பதிவேற்றிய டுவிட்டை புகைப்படமெடுத்து மீண்டும் வளைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் குறித்த சமூகம் மனவேதனைக்கு உள்ளாகின்றது. இதனை தயவு செய்து நிறுத்துங்கள்.

அத்துடன் நானும் சாதாரண பெண்தான் மீண்டும் பிழை செய்யலாம். அப்போது என்னை நீங்கள் என்ன செய்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் டுவிட்டில் நான் வெளியிட்ட தகவலை மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பி அச்சமூகத்தின் உணர்வுகளை பாதிப்படைய செய்ய வேண்டாம்” என கஸ்தூரி கோரியுள்ளார்.

இதேவேளை நேற்று சனிக்கிழமை சென்னை ஆழ்வார் பேட்டையில் கஸ்தூரியின் இல்லத்திற்கு முன்பாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த திருநங்கைகள் குறிப்பிட்டுள்ளதாவது,

“நாங்கள் சமூகம்,பொருளாதாரம்,அரசியல் என அனைத்திலும் பல போராட்டங்களில் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதனை சிந்திக்காமல் கஸ்தூரி வெளியிட்ட கருத்து அவர் மீதான நன்மதிப்பை இல்லாமல் செய்துள்ளது.

மேலும் அரசியல் இலாபத்திற்காக தங்களை இழிவுபடுத்தி டுவிட்டரில் பதிவேற்றியமைக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி திருநங்கைகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.