திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி செய்த நெகிழ்ச்சியான செயல் : குவியும் வாழ்த்துகள்!!

432

தமிழகத்தில்…

தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு, புதுமணத் தம்பதியினர் அமைச்சரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த சம்பவம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜி. இவருக்கு ஹரிபாஸ்கர் என்ற மகன் இருக்கிறார். ஹரிபாஸ்கர் நகைகள் செய்யும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும், மணலூர்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சாருமதிக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அதன் படி இவர்களின் திருமணம் மே 17-ஆம் திகதி முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் முழு முடக்கம் போடப்பட்டது.

இதன் காரணமாக சுபநிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், இவர்களின் திருமணம் இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது.

இதையடுத்து, திருமணம் முடிந்த கையோடு, இந்த தம்பதியினர் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தில் 51,000 ரூபாயை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர்.

அதன் படி, உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் வீட்டுக்குச் சென்று அவரிடம், இத்தம்பதியினர் அந்த பணத்தை வழங்கினர். இந்த நிதியை பெற்றுக்கொண்ட அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி அனுப்பிவைத்தனர்.