நடிகை ப்ரியாமணியின் தற்போதைய நிலை? ஒரு வருடமாக ரகசிய காதலில் விழுந்த சுவாரஸ்யம்!

859

பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அமீரின் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படம் மூலம் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தார்.ப்ரியாமணி மும்பை தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ப்ரியாமணியும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுவும் ஒரு வருடமாக ரகசியமாக காதலித்தார்களாம்.அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு வீட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன், கடந்த வருடம் காதலனை கரம் பிடித்தார்.திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று ப்ரியாமணி கூறியிருந்தார்.

எனினும், திருமணத்திற்கு முன்பு போல பெயர் எடுத்து கொடுக்கும் எந்த படங்களும் இது வரை வெளிவரவில்லை.இந்த நிலையில், தற்போது, குடும்பத்துடன், மகிழ்ச்சியாக இருப்பதுடன், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக இருக்கின்றார்.