பாம்புடன் சேர்ந்து நடித்த நடிகையின் உயிர் பறிபோன சோக சம்பவம்!

1344

மேற்கு வங்க மாநிலத்தில் படப்பிடிப்பின் போது பாம்பு கடித்து நடிகை உயிரிழந்துள்ளார்.63 வயதான Kalidashi Mondal என்ற நாடக நடிகை, பாம்பு காட்சி தொடர்பாக மேடையில் நடித்துக்கொண்டிருந்தபோது, பாம்பு அவரை கடித்துள்ளது.

எப்போதும், பிளாஸ்டிக் பாம்பினை பயன்படுத்துவார்கள், ஆனால் இந்தமுறை உண்மையான பாம்பினை நடிப்பதற்கு பயன்படுத்தியுள்ளார்கள். பாம்பு கடித்து மேடையில் மயங்கி விழுந்த நடிகையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.