பிரபாகரன் வீட்டிற்கு சென்ற தருணம்- அவரை பற்றி சில விஷயங்கள் பேசிய நடிகர் சதீஷ்!

1447

வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றாலே எல்லோருக்கும் ஒரு மரியாதை வரும். இலங்கை தமிழ் மக்களுக்காக போராடிய வீரர்.இவரது இல்லத்திற்கு அண்மையில் சென்றவர் நடிகர் சதீஷ்.

அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தை கூட தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.ஒரு பேட்டியில் அவரை பற்றி பேசும்போது, எனக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்பிய பிரபலங்களில் பிரபாகரன் அவர்களும் ஒருவர்.

ஆனால் இப்போது நடக்காது, அவர் உயிரிழந்து விட்டார் என்று வந்த புகைப்படங்களை பார்த்து எல்லாம் நான் அழுது இருக்கிறேன், அதேபோல் விடைகொடு எங்கள் நாடே போன்ற பாடல்கள் எல்லாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பேசியுள்ளார்.