பெண்களை குறிவைத்தது ஏன்? சைக்கோ கொலைக்காரனின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

738

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட சைக்கோ கொலையாளி எதற்காக அதிகமான பெண்களை கொலை செய்தேன் என்பது குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளான்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரே மாதிரி இரு கொலைகள் நடந்த நிலையில் பொலிசார் தனிப்படை அமைத்து விசாரித்துள்ளனர்.

அதில், இதேபோன்ற கொலைகள் அண்டை மாநிலமான தமிழகத்திலும் நடந்துள்ளதா? எனும் கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர்.

இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பொலிசாருக்கு கிட்டியுள்ளது.

தமிழகத்தின் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு போன்ற இடங்களில் இதுபோன்ற கொலைகள் நடந்துள்ளது தெரியவந்தது.

மேலும், சித்தூரில் நடைபெற்ற கொலை சம்பவங்களில் ஈடுபட்டவரின் கைரேகையும், தமிழகத்தில் நடைபெற்ற கொலைகளில் ஈடுபட்டவரின் கைரேகையும் ஒத்துப்போனதால், குற்றவாளி ஒருவரே என்பது பொலிஸாருக்கு தெரியவந்தது.

பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் வேலூர் மாவட்டம், வாலாஜாவைச் சேர்ந்த முனுசாமி (42) என்பவர்தான் இந்தக் கொலைகளை செய்தது என தெரியவந்தது.

இதையடுத்து, முனுசாமியை சித்தூர் மாவட்டம், திகுவ கொத்தபல்லி பேருந்து நிலையத்தில் தனிப்படை பொலிசார் கைது செய்தனர்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், முதல் முறையாக ஒரு பெண்ணை கொலை செய்த போது அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது, அதன் பிறகு பெண்களை கொலை செய்வதை வாடிக்கையாக மாற்றிவிட்டேன்.

அதிகமாக இரவில் தனியாக இருக்கும் பெண்களையே கொலை செய்வேன், அவர்கள் வீட்டிற்கு செல்லும் நான் எனக்கு உணவு வேண்டும் என்று கேட்பேன், அவன் உணவு கொடுக்க மறுக்கும் பட்சத்தில் அவர்களை கடித்து கொடூரமாக கொலை செய்துவிடுவேன் என தெரிவித்துள்ளான்.

உணவுக்காக மட்டுமே முனுசாமி இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்,

மேலும் இவனை தொடர்ந்து காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக ஆந்திர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

1992-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் முனுசாமி ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா உட்பட பல இடங்களில் 6 கொலை செய்துள்ளதும், சித்தூர் மாவட்டத்தில் 2 கொலை செய்ததும், 28 திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

மட்டுமின்றி கடந்த ஆண்டு 50 ரூபாய்க்காக 2 வயது சிறுமியையும் முனுசாமி கொலை செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.