பெண்களை மயக்க கல்லறைக்கு அழைத்துச் செல்லும் நடிகர் சஞ்சய் தத்! 308 பெண்களுடன் இருந்தது அம்பலம்!!

595

பெண்களை மயக்குவதற்கு பிரபல திரைப்பட நடிகர் சஞ்சய் தத் என்ன வழியை பின்பற்றுவார் என்று இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி போட்டுடைத்துள்ளார்.

சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை மையாக கொண்டு சஞ்சு என்ற பெயரில் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.ஜுன் 29-ஆம் திகதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் காட்சியில் சஞ்சய் தத் தன்னுடைய வாழ்க்கையில் 308 பெண்களுடன் தூங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சஞ்சய் தத் தான் டேட் செய்யும் பெண்களை ஒரு கல்லறைக்கு அழைத்துச் சென்று, இது என் தாயின் கல்லறை என்று கூறி அவர்களை செண்டிமெண்டாக லாக் ஆக்கிவிடுவாராம்.சஞ்சய் தத் பல பெண்களை கல்லறைக்கு அழைத்துச் சென்று இப்படி கூறியுள்ளார். ஆனால் உண்மையில் அது அவருடைய தாயின் கல்லறை இல்லை.

சஞ்சய் தத்தை காதலித்த பெண் ஒருவர் அவரை காதலித்து ஏமாற்றிவிட்டாராம். இதனால் அவர் உடனடியாக தன்னுடைய நண்பரின் காரை எடுத்துக் கொண்டு, அந்த பெண்ணின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதியுள்ளார்.

இதில் இரண்டு கார்களுமே சேதமாகியுள்ளது. ஆனால் சஞ்சய் தத்துக்கு மோதிய பின்பு தான் அது காதலியின் கார் என்பது தெரியவந்துள்ளது என்று இயக்குனர் ராஜ்குமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.சஞ்சய்தத் மாதுரி தீட்சித், டினா மூனிம் மற்றும் ரிச்சா ஷர்மா போன்ற பல நடிகைகளுடன் காதல் கொண்டிருந்தார்.