புதுச்சேரி…
புதுச்சேரி முத்தியால்பேட்டை சுந்தரர் விதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது மனைவி நாகஜோதி. கட்டிட வேலை செய்து வருகின்றார்.
இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் 2 மகள்கள், ஒரு மகன் ஈஸ்வருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவரது இளைய மகன் ஈஸ்வர் (15), அருகில் உள்ள தமிழக பகுதியான கோட்டகுப்பத்தில் உள்ள ஒர் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் பள்ளிக்கு செல்வதற்கு விருப்பம் இல்லாமல் இருத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனை நாகஜோதி அவரை பள்ளிக்கு செல்லுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவன் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாணவனின் தாய் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,
ஈஸ்வர் பள்ளிக்கு செல்ல விரும்பாத காரணத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.