மது அருந்திவிட்டு கார் விபத்து ஏற்படுத்திய பிரபல இயக்குனர்!

633

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். இவர் கடந்த 20ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார், அதோடு திரைப்பிரபலங்களுக்கும் பார்ட்டி ஒன்று வைத்திருந்தார்.

அதில் கலந்துகொண்ட பிரபல இயக்குனர் ரவீந்திரா மது அருந்திவிட்டு வீட்டிற்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கபே அப்பாட் அருகே இரவு 11 மணிக்கு சென்றபோது மற்றொரு கார் மீது தனது காரை மோதியுள்ளார்.

வேறொரு கார் மீது மோதியும் வண்டியை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார். விபத்தால் பாதிக்கப்பட்ட ஹர்மிந்தர் சிங் என்பவர் ரவீந்திரா மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.