மலைத்தொடரில் மாயமான இளைஞர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

580

நக்ல்ஸ் வனப்பகுதியை பார்வையிட சென்று காணாமல் போன ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு காவல்துறை நிலையங்களை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாயமாகியிருந்தவர்கள் பனாகொட – மீகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆறாம் திகதி பன்னவில – பம்பரஎல்ல பகுதியின் ஊடாக இவர்கள் நக்ல்ஸ் வனப்பகுதிக்கு நுழைந்துள்ளனர்.

இதன்போது, தொலைத் தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் இவ்வாறு காணாமல் போயிரிருந்தனர்.

இந்நிலையில் பம்பரஎல்ல வனப்பகுதியில் வைத்து குறித்த இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.