ராணுவ வீரரின் 27 வயதான மனைவி தூக்கிட்டு தற்கொலை : வெளிச்சத்துக்கு வந்த அதிர வைக்கும் காரணம்!!

344

திருப்பத்தூர்…

தமிழகத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் பால்னாங்குப்பம் மச்சன்கண்ணன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (31) ராணுவ வீரர்.

இவரும் குடியாத்தத்தை அடுத்த வெங்கட்டூர் கிராமம் பகுதியை சேர்ந்த ரேவதி (27) என்பவரும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாசிகா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

ஜெகன் கடந்த 13-ந் திகதி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரேவதி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரேவதியின் தந்தை வெங்கடேசன் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.