அன்று ஹொட்டல்களில் மேஜைகளை சுத்தம் செய்தவர்! இன்று ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போனார்!!

587

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் உள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கேஜ்ரோலியா பெங்களூரு அணி சார்பில் ரூ.85 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு, இளம் வயதில் இருந்து கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம்.

ளம் வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தபோதிலும், குடும்ப வறுமை, ஏழ்மை காரணமாக முழுமையாக கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியவில்லை.

தனது குடும்ப வறுமைக்காக மளிகைக் கடைகளிலும், ஹொட்டல்களில் மேஜைகளை சுத்தம் செய்யும் பணியிலும், உணவு சப்ளை செய்யும் பிரிவிலும், ஆர்டர் எடுக்கும் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கேஜ்ரோலியா பகுதி நேரமாக ஹொட்டலில் பணியாற்றியுள்ளார்.

இருப்பினும், தனது பணியி முடித்துவிட்டு கிரிக்கெட் பந்துவீச்சுப் பயிற்சியும் எடுத்து வந்துள்ளார்.

டெல்லியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி கிரிக்கெட் கிளப்பில் கேஜ்ரோலியா சேர்ந்து பயிற்சி எடுக்கத் தொடங்கினார். அங்கு இவரின் திறமையைப் பார்த்த பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் கேஜ்ரோலியாவுக்கு தேவையான பயிற்சிகள் அளித்து, அவரை மெருகேற்றி டெல்லி அணியில் இடம் பிடிக்க உதவியுள்ளார்.

அதன்பின்னர், 2017-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் டெல்லி அணியில் விளையாட இடம் கிடைத்தது. அதன்பின் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி என்னை ரூ.10 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினார்கள்.

ஆனால் ஒருபோட்டியில் கூட இவரை களமிறக்கவில்லை. அதன்பின் நடந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி என்னை ரூ.85 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது.

இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் சகோதரி திருமணத்துக்கு வாங்கிய கடனை இந்தப் பணத்தில் அடைத்திருக்கிறேன். என் சகோதரரை சி.ஏ. படிக்க வைத்து வருகிறேன்.

பெங்களூரு அணியில் விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களுடன் விளையாடுவதை நினைக்கும் போது, பெருமையாக இருக்கிறது என கூறியுள்ளார்.