ஆஞ்சநேயரிடம் கோரிக்கை விடுத்த ரமணியம்மாள்! வேலை பறிபோனதால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

626

கானக்கருங்குயில் ராக் ஸ்டார் ரமணியம்மாள் என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும்.பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “சரிகமப’ நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் இவரின் குரல் ஒலித்ததில், நாடு கடந்தும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு.

தற்போது அவருக்கு பாடல் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் ரமணி அம்மாவின் வீட்டு வேலை பாதிக்கப்படுதாம்.பாடுவதற்காக செல்லுவதால் 8 வீட்டில் வேலை போய் விட்டதாக கவலையுடன் கூறியுள்ளார். தற்பொழுது இரண்டு வீட்டில் மட்டுமே வீட்டு வேலை பார்த்து கொண்டிருக்கிறார்.

இந்த வேலையும் போய் விடக் கூடாது நீ தான் பாத்துக்கனும்னு.. ஆஞ்சநேயர் கிட்ட கோரிக்கை விடுத்துள்ளார். இதை கேட்ட ரமணியம்மாளின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். அது மட்டும் இல்லை, பாடல் வாய்ப்புகள் குவிந்து வருவதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.