இந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்!!

722

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

ஏன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தேன் என்பதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். “நான் 16 வயதில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்தேன். அப்போது ஸ்கூலில் அதிகம் பிரபலமாகிவிட்டேன். எனக்கு பெற்றோர் அனைத்தையும் கற்றுக்கொடுத்து ஓப்பனாக வளர்த்துள்ளனர். 18 வயதாக இருந்தாலும் கூட ஒரு 24 வயது பெண் போல யோசிப்பேன்.”

“இருட்டு அறை யில் முரட்டு குத்து படத்தில் நடித்தேன் என கூறினால் என்னை தவறாக நினைக்கிறார்கள். நான் யாருன்னு எனக்கு தெரியும், என் குடும்பத்துக்கு தெரியும். மற்றவர்களுக்கும் என்னை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என நினைத்துதான் பிக்பாஸ் வந்தேன்” என யாஷிகா தெரிவித்துள்ளார்.