இவரைத் தெரியுமா : இலட்சங்களில் புரளும் தமிழன்!!

1023

கிராமிய உணவுகளின் மூலம் மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்கள் தமிழ்நாட்டை சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்தினர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபிநாத்(26), டிப்ளமோ படித்துள்ள இவர் தனது தந்தை ஆறுமுகம், தாய், மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

கோபிநாத்தின் தந்தை ஆறுமுகம் அசைவ உணவுகள் சமைப்பதில் கைதேர்ந்தவர். இதைவைத்து இவர்கள் குடும்பம் கடந்த ஒன்றரை வருடங்களாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறது.

மாட்டிறைச்சி குழம்பு, ஆட்டு குடல் குழம்பு, இறால் குழம்பு, வாத்து கறி போன்ற நாக்கில் எச்சில் ஊறும் அசைவ உணவுகளை ஆறுமுகம் சமைக்க அதை கோபிநாத் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார்.

அவர் குடும்பம் இதற்கு உதவியாக இருக்கிறது. Village Food Factory என்னும் தனி யூடியூப் சனல் கோபிநாத்துக்கு உள்ளது. கூகுள் அட்சென்ஸ், பங்குதாரர் வலைத்தளங்கள் மற்றும் சனல்களின் விளம்பரங்கள் மூலம் வருமானம் வருகிறது.

இது குறித்து கோபிநாத் கூறுகையில், இதுவரை பலவகையான சமையல் வீடியோக்களை வெளியிட்டுள்ளோம். என் தந்தை தற்போது யூ-டியூப் பிரபலமாக வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

இதுவரை எங்கள் வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் கண்டுரசித்துள்ளனர். முதல் மாதம் எங்களுக்கு 8000 வருமானம் தான் வந்தது. பின்னர் லட்சக்கணக்கில் வர ஆரம்பித்தது என பெருமையுடன் கூறுகிறார்.

1000 வீடியோவை பதிவேற்றுவதும், பிற்காலத்தில் ஹொட்டல் தொடங்குவதும் இந்த குடும்பத்தின் திட்டமாக உள்ளது.