உயிரோடு இருக்கும் இளம்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம் : சாதி வெறியால் அரங்கேறிய கொடூரம்!!

939

அரங்கேறிய கொடூரம்

இந்தியாவில் இளம்பெண் தாழ்ந்த சாதி நபரை திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தார் அவருக்கு இறுச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் போரி கிராமத்தை சேர்ந்தவர் குசும் (20). இவர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போனார். இதையடுத்து குடும்பத்தார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று குசும் தனது காதலனான நானு டங்கி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதை அவர் குடும்பத்தார் அறிந்து அதிர்ந்து போனார்கள்.

தாழ்ந்த சாதியை சேர்ந்த நானுவை, குசும் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தார் இது குறித்து பொலிசில் புகார் கொடுத்தார்கள். ஆனால் பொலிசாரிடம், நான் நானுவுடன் தான் வாழ்வேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார் குசும்.

இதனால் குசும் மீது வெறுப்படைந்த குடும்பத்தார் தங்கள் வீட்டுக்கு வந்து அதிர்ச்சி செயலை செய்தனர். அதன்படி உயிரோடு இருக்கும் குசுமுக்கு இறுதிச்சடங்களை அவர்கள் நடத்தினார்கள்.

சவப்பெட்டியில் குசுமின் புகைப்படம் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை அடைத்து வைத்து அதன் மீதும், குசும் புகைப்படத்தின் மீதும் மாலை அணிவித்தார்கள்.

பின்னர் சுடுகாட்டுக்கு சென்று அதை புதைத்தார்கள். இதையடுத்து குடும்பத்தார் ஒப்பாரி வைத்து அழுததோடு மொட்டை அடித்து கொண்டார்கள். பின்னர் ஊர் மக்கள் அனைவருக்கும் இறுதிச்சடங்கு முடிந்து உணவு பரிமாறினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.