உயிர் பிரியும் போது உருக்கமாக தாயிடம் அன்பை வெளிப்படுத்திய சிறுவன்

677

அமெரிக்காவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் இருக்கைகு இடையே சிக்கி 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் மடிசான்வில்லே பகுதியில் இயங்கி வந்த பள்ளியில் படித்து வந்த கையே பிளஷ் எனும் சிறுவன் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த காரில் தற்செயலாக ஏறி அமர்ந்துள்ளான்.

ஆனால் தெரியாமல் காரில் இருந்த ஃபோல்டிங் பொத்தானை சிறுவன் அழுத்திய காரணத்தினால் அவன் அமர்ந்து இருந்த இருக்கை தானியங்கி முறையில் மடிய தொடங்கியுள்ளது.

இருக்கை முழுவதும் மடிந்த காரணத்தால் சிறுவன் பிளஷின் உடல் மெதுவாக நசுங்க தொடங்கியுள்ளது. பதட்டத்தில் இருந்த சிறுவன் ஆபத்தின் தன்மை உணர்ந்து தன்னை காப்பாற்றுங்கள் என்று பொலிஸ்க்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளான்.

ஆனால் சிறுவன் எந்த வாகனத்தில் அமர்ந்திருக்கிறான் என்ற விவரம் பொலிஸ்க்கு தெரியாத காரணத்தினால் அனைத்து கார்களையும் சோதித்து சிறுவன் சிக்கிக்கொண்ட காரை கண்டுபிடிக்க பொலிசாருக்கு தாமதமாகிவிட்டது.

இதன் காரணமாக குறித்த நேரத்தில் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. இருக்கையில் சிக்கிக்கொண்ட போது பொலிஸாரிடம் பேசிய சிறுவன் நான் இறந்துவிட்டால் என் தாயிடம் தெரிவியுங்கள் நான் அவரை ரொம்ப நேசிக்கின்றேன் என உயிர்பிரியும் தருவாயிலும் சொல்லியுள்ளான்.

விளையாட்டுக்காக காரில் ஏறிய சிறுவன் இருக்கையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.