ஊரையே கலக்கிய நாட்டமை டீச்சர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

616

வருடங்கள் போக போக சினிமாவில் உள்ள பழைய நடிகர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. ஒருசிலர் தொடர்ந்து சினிமாவில் தலைகாட்டி வருவதால் மற்றவர்களை பற்றி நாம் மறந்தே போனோம்.

ஒரு காலத்தில் நாட்டாமை படத்தில் டீச்சராக வந்து கலக்கியவர் ரக்சா. வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமான ரக்சா பின் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நாயகியாக நடித்தார்.

காலப்போக்கில் பட வாய்ப்புக்காக கிளாமர் ரோலில் களம் இறங்கினார். இவர் நாட்டாமை, காதல் கோட்டை, அவ்வை சண்முகி, அந்த நாள், நம்ம அண்ணாச்சி, புதல்வன், நெஞ்சினிலே, ஜெமினி காதல் சடுகுடு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் சுத்தமாக பட வாய்ப்புகள் குறைந்து போக, ஹிந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும், தற்போது படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் ரக்சா.