எல்லா சர்ச்சைக்கும் இதாங்க காரணம்: தமிழக வீரர் அஸ்வின் பளீர் பேட்டி!!

713

அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் விவகாரம் குறித்து அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்மித், வார்னர் மற்றும் பேன் கார்ப்ட் ஆகிய மூன்று வீரர்களுக்கும் ஐசிசி போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையாமல் இருந்திருந்தால் நாம் இப்போது இதை பற்றி பேசிக் கொண்டிருக்க மாட்டோம். ஆடுகளம் மற்றும் ஓய்வறையில் என்ன நடந்திருக்கும் என்பது வெகு தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியாது.

இந்த செயலுக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் இரண்டிலும் நம்மை இந்த தொழில்நுட்பம்தான் வழிநடத்துகிறது என்று கூறலாம். பொதுமக்கள் பார்வைக்கு செல்லும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.