ஒத்தை ஆளாக குறைந்த செலவில் விமானத்தில் பயணித்த நபர்! காரணம் என்ன?

354

விமான சேவை………

தனி ஆளாக நபர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் வெறும் 18,000 ரூபாய்க்கு தன் விமான டிக்கெட் எடுத்து தனியாளாக பயணித்துள்ளார்.

கடந்த மே 19-ஆம் தேதி மும்பையிலிருந்து துபைக்கு போயிங்777 ரக விமானம் செல்லவிருந்தது. அதில மும்பையைச் சேர்ந்த 40 வயது பாவேஷ் ஜாவேரி, என்பவர் 360 இருக்கைகள் கொண்ட போயிங் விமானத்தில் தன்னந்தனியாக பயணித்துள்ளார்.

மேலும், கொரோனா பரவல் காரணமாக பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஒரு போயிங் விமானத்தில் பயணம் செய்ய ஒரே ஒரு பயணி மட்டும் முன்பதிவு செய்திருந்த நிலையில், விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், அந்த பயணிக்காக விமானத்தை இயக்கியுள்ளது

இதுகுறித்து கூறிய விமான சேவை மையம், மிகவும் பரபரப்பான இரண்டு விமான நிலையங்களை இணைக்கும் இந்த போயிங்777 ரக விமானம், மும்பையிலிருந்து துபைக்கு போயிங் விமானத்தை இயக்க ரூ.8 லட்சம் மதிப்புள்ள 17 டன் எரிபொருளை செலவிட்டு ஒரே ஒரு பயணிக்காக இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது.

இந்த பயணி இல்லை என்றாலும், இந்த விமானம் இயக்கப்பட்டிருக்கும், ஏனென்றால், துபையிலிருந்து மும்பை வரும் பயணிகளுக்காக மறுமார்கத்தில் இந்த விமானம் இயக்கப்பட வேண்டும் அல்லவா என்று விமான சேவை நிறுவன ஊழியர்கள் கூறுகிறார்கள்.