ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து கொலைகள்: கேரளாவை உலுக்கிய தாயின் வெறிச்செயல்!!

577

கேரளாவில் ஒரு குடும்பத்தில் நடந்த அடுத்தடுத்த கொலையில் தொடர்புடைய சௌமியா என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.கண்ணூரை சேர்ந்த சௌமியா (27) என்பவர் தனது குடும்பத்தினருக்கு பல மாதங்களாக விஷம் கலந்துகொடுத்து அவர்களை கொலை செய்துள்ளார்.

இது கொலை என்று யாரும் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக Slow Dose விஷம் கொடுத்து வந்துள்ளார்.இதில், ஜனவிரி 31 ஆம் திகதி இவரது மகள் ஐஸ்வர்யா இறந்துள்ளார். மார்ச் 7 ஆம் திகதி தாய் கமலா மற்றும் ஏப்ரல் 13 ஆம் திகதி தந்தை குன்கிகிணான் இறந்துபோனார்.

இவர்கள் அனைவரும் இறந்துபோவதற்கு முன்னர், குமட்டல் மற்றும் அஜீரணம் பிரச்சனைகள் அறிகுறிகளாக இருந்துள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் இவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.ஒரே குடும்பத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனையடுத்து சௌமியா பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், கொலைக்கான காரணத்தை தற்போதைக்கு சொல்ல இயலாது. இந்த மரணங்களுக்கு பின் இருக்கும் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.