ஓடும் ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து..! திகிலூட்டும் காட்சி!!

458

ஆம்னி பேருந்து……..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆம்னி பேருந்தில் தீப்பிடித்ததை அறிந்த ஓட்டுநர் அதை நிறுத்திவிட்டுக் கீழிறங்கி உயிர் தப்பினார்.

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து ஆம்னி பேருந்தில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விட்டுள்ளனர்.

அதன்பின் இன்று காலை பேருந்தை எடுத்துக் கொண்டு ஓட்டுநர் தெய்வேந்திரன் மதுரைக்குப் புறப்பட்டார். கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே வந்தபோது பேருந்தின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்ததால் ஓட்டுநர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டுத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அ.டி.த்துத் தீயைக் கட்டுப்படுத்தினர்.

தொழிலாளர்களை இறக்கிவிட்டுத் திரும்பும் வழியில் தீப்பிடித்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தத் தீவிபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.