கடிதம் எழுதிவிட்டு நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி எடுத்த விபரீத முடிவு!!

617

விழுப்புரம்….

நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.கே சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் சுசீந்திரன் மற்றும் அவரது தங்கை பிரமிளா இருவரும் வசித்து வந்தனர். பிரமிளாவின் கணவரான கமல் நடிகை ஊர்வசியின் தம்பி ஆவார்.

கடந்த 2 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து பிரமிளா மற்றும் சுசீந்திரன் இருவரும் வாடகைக்கு வீட்டு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சுசீந்திரன் வீட்டில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு தனித்தனி அறைகளில் சுசீந்திரனும், பிரமிளாவும் தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்கியுள்ளனர்.

இதையடுத்து பொலிஸ் வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் வறுமை மற்றும் உடல்நிலை சரியில்லாததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்.

எங்களின் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து இருவரின் உடல்களையும்பொலிஸ் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் பொலிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா பிரமிளாவுக்கு பணம் உதவி செய்து வந்துள்ளார்.

ஆனால் அவர் இறந்த பின்பு பண உதவி கிடைக்காததால் வறுமையின் காரணமாக பிரமிளாவும், சுசீந்திரனும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.