கதிர்காமம் செல்லும் வீதியில் வினோத யானைகள்!!

939

புத்தளத்திலிருந்து கதிர்காமம் செல்லும் பிரதான வீதியில் யானைகள் வழியை மறித்து நின்று, அவ்வழியே செல்வோரிடம் பழங்கள் வாங்கி உண்ணும் விநோத சம்பவம் இடம்பெறுகின்றது.

இந்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்தால் மட்டுமே அவை வழி விடுகின்றன.

இது பொதுமக்களுக்கும் பழகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யானைகளைப் பற்றி தெரியாதவர்கள் அவ்வழியே செல்லும் போது யானைக்கு பயந்து அவை செல்லும் வரை காத்திருப்பார்கள்.

ஆனால் பழக்கப்பட்டவர்கள் சென்று பழம் வழங்கினால் அந்த யானை உடனே அவர்களுக்கு வழி விடும்.

வாகனங்கள் வந்தால் வீதியின் மத்திக்கு வந்து வழிமறித்து நிற்கும். வாகனங்கள் அருகே சென்று தும்பிக்கையை நீட்டி பழம் கேட்கும்.

பழங்களை வழங்கியதும் குறித்த யானை வழியைவிட்டு ஒதுங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.