காதலனை கட்டிப்போட்டு விட்டு காதலியை பாலியல் வன்கொடுமை : அலறித்துடித்த அவலம்!!

278

ஆந்திர…

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. அங்குள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் 22 வயது வாலிபர் ஒருவர் படித்து வருகிறார். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை இருவரும் அங்கு உள்ள கடற்கரைக்கு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக பேசிக் கொண்டு இருந்தனர்.

இதனைக் கவனித்துக்கொண்டே கடற்கரைக்கு வந்த 2 வாலிபர்கள் மதுபோதையில் காதலர்களிடம் சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவன் அவர்களிடமிருந்து காதலியை மீட்க போராடினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவனின் கை கால்களை கட்டிப் போட்டு விட்டு, பின்னர் மாணவியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மாணவி இதுகுறித்து செல்போன் மூலம் தனது தம்பிக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தம்பி அலறி அடித்துக்கொண்டு கடற்கரைக்கு வந்தார். அங்கு கை கால்கள் கட்டப்பட்டு இருந்த மாணவரையும், அக்காவையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி கொடுத்த அங்க அடையாளங்களை வைத்து நாகபாபு என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரையும் தேடி வருகின்றனர்.

மேலும்,கடற்கரையில் தனியாக இருந்த கல்லூரி மாணவனை கட்டிப்போட்டு அவருடைய காதலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.