காதலித்த பெண்ணை கட்டையால் தாக்கி கொலை செய்த இளைஞர் : பதறவைக்கும் சம்பவம்!!

458

கரூரில்….

கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு உதயகுமார் என்ற மாணவர் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் பயின்று வந்த மாணவியை உதயகுமார் காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவன் செயல்பாடுகள் சரி இல்லாததால் பள்ளி நிர்வாகம் மாணவனை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி அன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவன் உதயகுமார்,

வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவி சோனாலியை தான் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளான்.

அப்போது வகுப்பறையில் இருந்த பேராசிரியர் சதீஸ்குமார், அதை தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கி விட்டு தப்பியோடி விட்டான்.

இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி சோனாலியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர் சதீஸ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து , உதயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், 23 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.