காதலுக்கு எதிர்ப்பு.. காதலியின் தந்தை வெட்டிக் கொலை : காதலனின் குடும்பத்தின் வெறிச்செயல்!!

206

ராணிப்பேட்டை….

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீராம்பாடி கிராமத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த காதலன் அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பெண்ணின் தந்தையை மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சசிதரன் (45). இவருக்கு திருமணமாகி இரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளான சினேகாவிற்கு கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிநேகா, பக்கத்து ஊரான கீராம்பாடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு சில நாட்கள் முன்பு வீட்டைவிட்டு வெளியேறி அவரை திருமணம் செய்துகொண்டார். இப்போது சினேகாவிற்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தந்தை சசிதரனும், மகள் சினேகாவும் பக்கத்து பக்கத்து கிராமத்தில் வசித்து வருகின்றனர். கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த சசிதரனுக்கு மகள் வாழும் கீழம்பாடி பகுதியில் 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ள காரணத்தினால் அடிக்கடி அப்பகுதிக்கு வந்து செல்லும்போது இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சசிதரன் சென்றுள்ளார். அப்போது அங்கு விக்னேஷும் இருந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த சினேகாவின் கணவரும் சசிதரனின் மருமகனுமான விக்னேஷ் மற்றும் அவருக்கு அண்ணன் தம்பி முறை உடைய மூன்று நபர்களுடன் கடப்பாறை மற்றும் கத்தியை கொண்டு சசிதரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சசிதரனை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சசிதரன் மருத்துவமனையில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு கிராமிய காவல்துறையினர்

சசிதரனின் மருமகனான விக்னேஷ் மற்றும் பசுபதி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், சௌந்தர்ராஜன் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்