கூட்டு பலாத்காரத்திற்கு இரையான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: கதறும் குடும்பம்!

672

இந்தியாவில் 8 இளைஞர்களால் கூட்டு பலாத்காரத்திற்கு இரையான 16 வயது பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலமான ஹரியானாவில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த ஞாயிறு அன்று தமது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அவரது குடியிருப்பில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளது.பின்னர் நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் வைத்து கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளது. இதனையடுத்து அதிகாலையில் குற்றுயிராக கிடந்த இளம்பெண்ணை அவரது குடியிருப்பின் அருகாமையிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே அந்த வழியாக வந்த குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் சுயநினைவை இழந்த நிலையில், நிர்வாணமாக கிடந்த அவரை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் அவரது பெற்றோருக்கும் தெரியப்படுத்தி, பொலிசாருக்கும் புகார் அளித்துள்ளார்.ஆனால் அதே நாள் குடியிருப்பில் எவரும் இல்லாத நிலையில் குறித்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபோன்ற ஒரு நிலையில் தமது மகளை தனியாக விட்டுச் சென்றது தவறான முடிவாக அமைந்தது என அவரது தந்தை கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

தமது மகளுக்கு இந்த நிலையை அளித்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என அவர் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் குடியிருக்கும் அதே பகுதியை சேர்ந்த கும்பலே பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், செல்வாக்கு மிகுந்த அந்த கும்பல் தற்போது வழக்கை வாபஸ் பெற நிர்பந்திப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கும்பலை கைது செய்ய 3 பொலிஸ் குழுக்களை அமைத்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இதுவரை கைது நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.