கொழும்பில் இருந்து ரயிலில் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

586

கொழும்பு – கோட்டையில் இருந்து கம்பஹா நோக்கி சென்ற ரயில் பயணி ஒருவர் 3360 ரூபா தண்டப் பணம் செலுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

கொழும்பு நகரத்தில் உள்ள அலுவலகத்தில் சேவை செய்யும் அதிகாரி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அவர் கம்பஹாவில் இருந்து ரயிலின் மூலம் பயணம் மேற்கொள்ளும் ஒருவராகும். அதற்காக மாதாந்த டிக்கட் பெற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம் அவசர கடமை காரணமாக அவரது பயணம் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு வரும் போது 7 மணியை நெருங்கியுள்ளது. இதன்போது முன்னால் ஒரு ரயில் செல்ல ஆரம்பித்துள்ளது.

அவசரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதனால் என்றும் இல்லாத வகையில் குறித்த நபர் அந்த ரயிலில் தொங்கியவாறு ஏறியுள்ளார்.

எனினும் அவர் கம்பஹா செல்ல வேண்டிய ரயிலுக்கு பதிலாக தவறான ரயிலில் ஏறியுள்ளார்.

இதன் காரணமாக குறித்த அதிகாரியிடம் பாதுகாப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதிகாரியின் செயற்பாடு காரணமாக அவருக்கு 3360 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி குறித்த அபராத பணத்தை செலுத்தி விட்டு அவர் வீடு நோக்கி சென்றுள்ளார்.