சத்தியத்தை கடைபிடிக்காமல் பிரபலத்தை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்!!

897

குழந்தைகள் முதல் இளைஞர்களை கவர்ந்தவர்களில் ரஜினியை அடுத்து விஜய்யை கூறலாம்.இப்போது உள்ள நடிகர்களின் சிவகார்த்திகேயனை சொல்லலாம். அவரது படங்கள் குழந்தைகள் ரசிக்கும் வகையிலும் இருக்கும், இளைஞர்களை கவனிக்கவும் வைக்கிறார்.

இவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா என்ற படம் மூலம் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த பாடலும் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருகிறது. கல்யாணம் வயசு என்று தொடங்கும்

அந்த பாடலை பார்த்த பாடலாசிரியர் மதன் கார்க்கி டுவிட்டரில், ஒருவர் என்னிடம் நான் பாடல் வரிகள் எழுதவே மாட்டேன் என்று சத்தியம் செய்தார் நானும் நடிக்க வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்தேன். யாரு அதை தவறியுள்ளார் பாருங்கள் என்று சிவகார்த்திகேயனை கூறியுள்ளார். பிறகு பாடல் வரிகளை பாராட்டியுள்ளார்.

இதற்கு சிவகார்த்திகேயன், நட்புக்காக இதை செய்தேன் என்னை மன்னித்துவிடுங்கள். இப்போது நீங்களும் நடிக்கலாம் ஒரு கட்டுப்பாடும் இல்லை என்று பதில் டுவிட் செய்துள்ளார்.