அபிஷேக் வர்மா..
டெல்லியில் ஒருவர் தனது சித்தி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் உடற்பயிற்சி செய்யும் டம்பலால் அ.டி.த்து கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியின் புராரியில் (Burari) வசிப்பவர் அபிஷேக் வர்மா. அவர் செவ்வாய்க்கிழமை மாலை பலாம் (Palam) பகுதியில் வசிக்கும் தனது சித்தி பபிதா வர்மா மற்றும் அவரது மகன் கவுரவ் ஆகியோரை கொ.லை செ.ய்.ததாக கூறப்படுகிறது.
பபிதாவின் கணவர் கிரிஷன் ஸ்வரூப் இந்திய விமானப்படையில் கணக்காளராக பணிபுரிகிறார். சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் இல்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை, கிரிஷன் ஸ்வரூப் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, அவர் தனது மனைவி பபிதா மற்றும் அவரது மகன் இருவரும் இ.ற.ந்து கிடந்ததைப் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னர் காவல்துறையினர் அந்த பகுதியின் சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்யத் தொடங்கினர். அப்போது, ஒரு நபர் இ-ரிக்ஷாவில் பபிதாவின் வீட்டை விட்டு வெளியேறுவதைக் கண்டனர். அந்த நபரின் ஆடைகளில் இ.ர.த்தக் கறைகளும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த இ-ரிக்ஷா டிரைவரை கண்டுபிடித்து பொலிஸார் விசாரித்தனர். ர.த்.தக் கறை படிந்த ஆடைகளுடன் இந்த அந்த நபரை தஷ்ரத்புரி மெட்ரோ நிலையம் அருகே இ.றக்கிவிட்டதாக டிரைவர் பொலிஸாரிடம் கூறினார்.
மேலும், அவர் தனக்கு மண் ஒட்டிய பணத்தை வழங்கியதாகவும், அதை வாங்க மறுத்ததால், மொபைல் ஆப் மூலம் பணம் கொடுத்தார் என ஆட்டோ டிரைவர் கூறினார். பின்னர், டிரைவருக்கு பணம் செலுத்தப்பட்ட அக்கவுண்ட் நம்பரை கண்டுபிடித்தது பொலிஸார் அபிஷேக் வர்மாவை கைது செ.ய்தனர்.
அவரை விசாரித்தபோது, அபிஷேக் எல்லா உண்மையையும் ஒப்புக்கொண்டார். 2019-ஆம் ஆண்டில் அபிஷேக் வர்மா தனது சகோதரியின் திருமணத்திற்காக பபிதாவிடம் இருந்து ரூ. 50,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது, ஆனால் அந்த தொகையை திருப்பி தரவில்லை.
அதனால், பபிதா பெரும்பாலும் அபிஷேக் வர்மாவையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்ந்து அ.வ.தூறாகவும், கொ.ச்சியாகவும் பேசி து.ன்.புறுத்திவந்துள்ளார். இதனை ஒரு கட்டத்தில் பொ.று.த்துக்கொள்ள முடியாத அபிஷேக், தனது சொந்த உறவினர்களைக் கொ.லை செ.ய்ய மு.டி.வெடுத்ததாக பொலிஸிடம் ஒப்புக்கொண்டார்.