சிறுவனுடன் தவறான உறவு: இளம்பெண்ணுக்கு சிறை!!

1447

பிரித்தானியாவில் 12 வயது சிறுவனுடன் தவறான முறையில் நடந்துகொண்ட 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Wrexham – ஐ சேர்ந்த Rhiannon Scott என்ற இளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் role play games விளையாடிதன் மூலம் 12 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பேஸ்புக் மெசஞ்சர் வாயிலாக தொடர்ந்து பேசிக்கொண்டனர், அப்போது Scott, அச்சிறுவனுக்கு சில ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி, அவனின் மனப்போக்கை மாற்றியுள்ளார்.

பின்னர், நாம் இருவரும் தனிமையான இடத்தில் சந்திப்போம் எனக்கூறி, காடுகளால் சூழ்ந்த சிறிய ஆறு இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று அச்சிறுவனுடன் தவறாக நடந்துகொண்டுள்ளார்,

இந்நிலையில், இவர்கள் தனிமையில் இருந்தபோது, இவர்களுக்கு அருகில் இந்த ஆற்றின் நீரானது இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதையடுத்து, ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுள்ளதோ என அறிந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றபோது அதிகாரிகளின் பார்வையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருவரது குடும்பத்தினரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அச்சிறுவனின் பெற்றோர், இப்பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணையில், இவன் சிறுவன் என தனக்கு தெரியாது என்றும் அவனது வயது 20 இருக்கும் என தான் எண்ணியதாகவும் கூறியுள்ளார், பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இப்பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.