தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற மகள்: வசமாக சிக்கியது எப்படி?

630

தமிழகத்தில் தகாத உறவை கண்டித்த தந்தையை மகளே விஷம் வைத்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.ராமநாதபுரம் சிக்கல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(வயது 52), ஆரோக்கியமாக இருந்த கருப்பையா இரு நாட்களுக்கு முன் திடீரென காலமானார்.

இதனால் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய குடும்பத்தினர் பொலிசுக்கு தகவல் அளித்தனர்.எனவே கருப்பையாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பொலிசார் முடிவெடுத்தனர்.

இதில் கருப்பையாவின் உடலில் விஷம் இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து வீட்டில் உள்ளவர்களிடம் பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

அப்போது, தகாத உறவை கண்டித்ததால் கருப்பையாவின் மகளான முருகேஸ்வரி விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.இதனையடுத்து முருகேஸ்வரியை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதை தெரிந்து கொண்ட கருப்பையா பலமுறை கண்டித்ததாகவும், இதனால் கோபத்தில் அவரை கொன்று விட்டதாகவும் பொலிசிடம் தெரிவித்துள்ளார்.முருகேஸ்வரியின் கணவர் வெளியூரில் வேலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.