தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை கண்டித்த கணவன் : குழந்தைகளுடன் தாய்க்கு நேர்ந்த சோகம்!!

519

விழுப்புரம்…..

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன்-ஜெயந்தி தம்பதியினர்.

இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு 2 வயதில் தனுஸ்ரீ என்ற பெண் குழந்தையும், தனுஷ்கா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்களாகியும் மனைவி வீட்டிற்கு வராததால் மனைவியை கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று தனது இரண்டு குழந்தைகளுடன் ஜெயந்தி ஆடூர் கொளப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் ஜெயந்தி மற்றும் அவரது 2 வயது பெண் குழந்தையான தனுஸ்ரீ ஆகியோர் நீச்சலடித்து கரைக்கு வந்துள்ளனர்.

இதில் 6 மாத கைக்குழந்தை தனுஷ்கா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி உயிரிழந்த ஆறுமாத கை குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கும்,

தனுஸ்ரீயை மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.