திருமணமான 5 நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண் : நடந்த விபரீதம்!!

357

சென்னை…

இந்தியாவில் திருமணம் முடிந்த ஐந்தே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி (27). ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர்கள் இருவருக்கும் கடந்த 23 ஆம் திகதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இதனையடுத்து ஓட்டேரி பகுதியில் உள்ள அக்கா மோகன பிரியாவின் வீட்டிற்கு அபிராமி தனது கணவர் சதீஷுடன் விருந்துக்கு சென்றுள்ளார்.

அப்போது அபிராமி நீண்ட நேரமாக படுக்கையறை கதவை திறக்காமல் இருந்த நிலையில் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்க்கையில் அபிராமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மோகன பிரியா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து பொலிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அபிராமி உறங்கும் போது ஆபத்தான கனவுகளை கண்டு வந்துள்ளார்.

இதனால் பயத்திலேயே பல நாட்கள் உறங்காமல் இருந்து வந்த நிலையில் மன விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.