திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த மகள் : கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!!

171

பீகார்…

பீகார் மாநிலமான கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் ராம். இவருக்கு கலாவதி என்ற மனைவியும் கிரண் குமரி என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் தேவ் தனது மகளுக்கு நாடி சர்மா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் இவரது மகள் கிரண் குமாரி அதே பகுதியினை சார்ந்த மற்றொரு நபரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தனது தந்தையிடம் நாடி சர்மாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

இதனால் மகள் மீது ஆத்திடமடைந்த தேவ், தனது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து தனது மகள் என கூட பார்க்காமல் கட்டி வைத்து கழுத்தை அறுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தனது மகளை காப்பாற்ற சென்ற கலாவதியையும் தேவ் ராம் தாக்கியுள்ளார்.

தந்தை கழுத்தை அறுத்ததை தொடர்ந்து வலியால் அலறி துடிதுடித்து கிரண் குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் அதிகாரிகளிடம் கலாவதி புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து தந்தை அவரது சகோதரர்கள் என மூவரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.