நடுவானில் வெகு விமர்சியாக நடந்த தமிழனின் திருமணம்…வைரலான வீடியோவால் விமான ஊழியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

270

நடுவானில்…

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விமானத்தின் நடுவானில் திருமணம் செய்து கொண்ட தம்பதியரால், விமான ஊழியர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின், மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ராகேஷ் மற்றும் தீக்க்ஷு, தம்பதியினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். கொரோனா ப.ரவல் தீ.வி.ர.மாக பரவி வருவதால், தமிழகத்தில் கொ.ரோ.னா கட்டுப்பாடுகள் க.டு.மை.யாக்கப்பட்டுள்ளது,

இதனால் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதனால், இந்த ஜோடியின், இரு குடும்பத்தினர் திட்டமிட்டு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து பறக்கும் விமானத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன் படி இரு குடும்பத்தை சேர்ந்த சுமார் 160 பேர் கொ.ரோ.னா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்று மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்வதற்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சிறப்பு விமானம் ஒன்றை பதிவு செய்தனர்.

நேற்று காலை சிறப்பு விமானத்தில் பயணம் செய்த புதுமண தம்பிதியினர்கள் மதுரை மினாட்சியம்மன் கோவில் மேல் விமானம் பறக்கும்போது, உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. திருமணத்தில் பங்கேற்க அதிகபட்சம் 50 உறவினர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில்,அதற்கும் மேலான எண்ணிக்கையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி அரசின் கொ.ரோ.னா த.டு.ப்பு வி.தி.க.ளை மீ.றியுள்ளதாக கு.ற்.ற.ச்.சா.ட்.டு எழுந்தது.

விமானத்தில் பயணம் செய்த பலரும் முககவசம் அணியாமல் இருந்தனர். இதையடுத்து இந்த விவகாரம், மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகத்தின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் த.ற்.கா.லி.க இ.டை.நீ.க்.கம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக வி.சா.ரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், திருமணத்திற்கு பிந்தைய உல்லாச பயணத்திற்காக மதுரையைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர் விமானத்தை பதிவு செய்ததாகவும், அரசின் தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இருப்பினும், பயணிகள் அதனை பின்பற்றவில்லை என்பதால் விதிகளுக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிறுவனத்தின் அதிகாரி, பல முறை விமானத்தில் இருந்த பயணிகளிடம் கொரோனா வழிமுறைகளை பின்பற்றும் படி கூறியதாகவும், ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவேயில்லை என்று கூறியுள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் பிரபல ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸிடம், திருமணத்திற்குப் பிறகு ஒரு பயணத்திற்காக மதுரையிலிருந்து பெங்களூருக்காக செல்ல விமானம் முன்பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.

இந்த தம்பதிகளின் திருமணத்தினால், இப்போது அந்த விமானத்தில் இருந்த விமான ஊழியர்கள் பலரும், இந்த கொ.ரோ.னா காலக்கட்டத்தில் வேலை இல்லாமல், இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் வேதனையில் உள்ளனர்.