நான் இன்னும் அவருடன் டச்சில் தான் உள்ளேன்: எதிர்காலத்தில் ஏதாவது நடக்கும்! எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி!!

835

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் கடும் விமர்சனைங்களை எதிர்கொண்டது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி.இந்நிலையில், இந்த நிகழ்ச்சி முடிவுற்று பல நாட்கள் ஆகியும் ஆர்யா திருமணம் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம்பெண்கள் அவரை சாடி வந்தனர்.

இப்படியிருக்கையில், ஆர்யாவுடன் இன்னும் டச்சில் இருக்கிறேன் என எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்க வீட்டு மாப்பிள்ளை இறுதிப்போட்டியின் போது, தனக்கு மணப்பெண்ணாக சீதாலட்சுமி, சுசானா, அகதா ஆகிய மூவரில் ஒருவரை ஆர்யா தேர்ந்தெடுத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர் யாரையும் தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீதாலட்சுமி, நிகழ்ச்சி குறித்து சில தகவல்களை கூறியுள்ளார்.அதில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு கல்லூரி நாட்களை நினைவூட்டியது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் நாங்கள் அனைவரும் ஒருத்தர் மீது ஆர்வமாக இருந்தோம். முதலில் மேடை பயம் இருந்தது. ஆனால் அதன் பிறகு இல்லை.

முதலில் ஆர்யா, சங்கீதா மேடத்தை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல ஆர்யா மீது ஃபீலிங்க்ஸ் வந்துவிட்டது. பினாலேவில் நடந்ததை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. நான் ஆர்யாவை திருமணம் செய்யாவிட்டாலும் என் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தாரின் மதிப்பை பெற்றுள்ளேன்.

மேலும், ஆர்யாவை முதலில் நடிகராக மட்டுமே பார்த்தோம். பின்னர் அவர் எங்களில் ஒருவர் ஆகிவிட்டார். எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தார்.

நான் அவரை இம்பிரஸ் செய்ய பெருமுயற்சி செய்தேன். அவர் என் மீது அக்கறை கொண்டிருந்தார். அவர் உண்மையாக நடந்து கொண்டார். நான் தவறு செய்தபோது கூட ஊக்குவித்தார்.

ஆர்யா யாராவது ஒரு பெண்ணை தேர்வு செய்வார் என்றே நினைத்தேன். அவர் தனது முடிவை அறிவித்ததும் எனக்கு குழப்பமாகி விட்டது. கேமராவுக்கு முன்னால் இதை ஆர்யாவால் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்தேன். அவரின் முடிவை மதிக்கிறேன்.

நான் இன்னும் ஆர்யாவுடன் டச்சில் தான் உள்ளேன். எதிர்காலத்தில் எங்களுக்கு இடையே ஏதாவது ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். நான் முதலில் அபர்ணதியை தவறாக புரிந்து கொண்டேன்.

அதன் பின்னர் தான் அவர் நல்லவர் என்பதை தெரிந்து கொண்டேன்” இவ்வாறு சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.