பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு தனது உயிரைவிட்ட சாரதி: நடந்தது என்ன?

375

தமிழகத்தில்..

தமிழகத்தில் அரசு பேருந்து சாரதி ஒருவர், பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு தனது உயிரைவிட்ட சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மணியங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை பணிக்கு திரும்பியுள்ளார்.

30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, பேருந்தை இயக்கிச் சென்ற செல்வராஜிற்கு திடீரென மாரடைப்ப ஏற்பட்டுள்ளது.

உடனே பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு தனது உடலை சமாளித்துக் கொண்டு பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார். மேலும் மயங்கிய சில நொடிகளில் அவர் உயிரும் பிரிந்துள்ளது.

ஒரு கணம் தப்பி இருந்தாலும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து இருக்கக்கூடும். ஆனால் சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றி விட்டு செல்வராஜ் உயிரைவிட்டது பயணிகளை கண் கலங்க வைத்துள்ளது.