பாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி: கண்ணீர் சிந்திய சிறுமியின் தந்தை!!

681

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்திவருபவர் சாமியார் ஆசாராம் பாபு.

கடந்த 2013ம் ஆண்டு ராஜஸ்தானில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கிலிருந்து வெளியே வந்தவர், குஜராத்தில் 2 சகோதரிகளை வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கினார்.

மேலும் தனக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த நபரை சுட்டுக் கொன்ற வழக்கும் இவர் மீது பதியப்பட்டது.இதனை தொடர்ந்து ஆசாராம் பாபுவை கைது செய்த பொலிசார் ஜோத்பூர் சிறையில் அடைத்தனர்.

நான்கு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சிறைக்கே சென்று ஆசாராம் பாபு குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதை கேட்டதும் கண்ணீர் விட்ட சிறுமியின் தந்தை, கடந்த நான்கு மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை, அச்சுறுத்தலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களது தொழிலும் மோசமாக பாதிக்கப்பட்டு விட்டது.

எனது மகளுக்கு நியாயம் கிடைத்துள்ளது, நீதியின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது.எங்களுக்கு ஆதரவாக இருந்த ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆசாராம் பாபு விடுதலையாக வேண்டி வாரணாசி, போபால் உள்ளிட்ட அவரது ஆசிரமங்களில் பிரார்த்தனை நடைபெற்றதுடன், சிறைக்கு மாலையுடன் வந்த ஆதரவாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.